Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
பிரிட்டன் பிரதமராக 2019-ல் போரிஸ் ஜான்சன் பொறுப்பேற்றார். அவர் பிரதமரான பின்னர் முதல் முக்கிய பயணமாக இந்தியாவுக்கு, குடியரசு தினத்தன்று வருகை தர இருந்தார். அச்சமயத்தில் பிரிட்டனில் புதிய உருமாறிய கொரோனா பரவத் துவங்கியதால் கடைசி நேரத்தில் அப்பயணத்தை ரத்து செய்தார். அப்பயணம் இம்மாத இறுதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. ஏப்., 26 முதல் நான்கு நாட்கள் இந்தியாவில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க திட்டம் வகுக்கப்பட்டது.
இந்தியாவில் தற்போது கொரோனா அதிவேகமாக பரவுவதால் ஏப்., 26 அன்று ஒரே நாளில் அனைத்து நிகழ்ச்சிகள், கூட்டங்களை வைத்துக்கொள்ள திட்டமிடப்பட்டது. இதற்கு அந்நாட்டு எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் எம்.பி., ஸ்டீவ் ரீட் எதிர்ப்பு தெரிவித்தார். இந்தியாவுக்கான அரசு முறை பயணத்தை ரத்து செய்து முன்மாதிரியாக இருக்க வேண்டும் என தொழிலாளர் கட்சி வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில், போரிஸ் ஜான்சினின் இந்திய பயணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது